சென்னை: குடிநீர் பிரச்னைக்குத் தீர்வுகாண புதிய கல்குவாரிகளில் இருந்து தண்னிர் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னை கோபாலபுரத்தில் நடைபெற்ற யோகா தின விழாவில் பேசிய அமைச்சர் இவ்வாறு கூறினார். வரும் உள்ளாட்சித் தேர்தலிலே ஆவடி மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.