×

அயோத்தி தாக்குதல் வழக்கு: 4 பேருக்கு ஆயுள் சிறை

அலகாபாத்: அயோத்தியில் கடந்த 2005ல் நடந்த தீவிரவாத தாக்குதலில் இரண்டு உள்ளூர்காரர்கள் உயிரிழந்தனர். துணை ராணுவப் படையை சேர்ந்த, 7 சிஆர்பிஎப் வீரர்கள் காயமடைந்தனர். பாதுகாப்பு படையினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 5 ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி தினேஷ் சந்திர அக்ரஹரி, இந்த வழக்கில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களில் 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் தலா ₹2.4 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். ஒருவர் விடுதலை செய்யப்பட்டார்.

Tags : Ayodhya , Ayodhya attack case, 4 get, life,imprisonment
× RELATED ராம நவமி நாளில் அயோத்தி ராமரின்...