×

என்ஐஏ அதிகாரிகள் கைதிகளிடம் விசாரணை

சென்னை: புழல் மத்திய சிறையில் சுமார் 2500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் வெடிகுண்டு வழக்கு,  தேச விரோத செயலில் ஈடுபட்டதாக பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், போலீஸ் பக்ருதீன் ஆகியோர் இந்த சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சமீபத்தில் இலங்கையில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என தேசிய புலனாய்வு முகமை அமைப்பின் டிஎஸ்பி சாகுல் அமீது தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் புழல் சிறைக்கு சென்று 3 பேரிடம் விசாரணை நடத்தினர். வெடிகுண்டு சம்பவத்தில் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்று 5 மணி நேரம் இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

Tags : detainees ,NIA , NIA officials,investigate,detainees
× RELATED குற்றவாளிகளை கைது செய்ய சென்ற...