கோவை: கோவையில் சித்தமருத்துவரை கைது செய்ய கோரி அரசு மருத்துவமனை முன்பு மாணவியின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சித்தமருத்துவர் குருநாதன் தந்த மருந்துகளால் கல்லூரி மாணவி சத்யப்ரியா உடல்நிலை பாதித்து இறந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.