×

திருமணமான மூன்றே மாதங்களில் இளம்பெண் தற்கொலை: மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தாயார் போலீசில் புகார்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே திருமணமான மூன்றே மாதங்களில் இளம்பெண் உயிரிழந்ததால், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தாயார் போலீசில் புகார் செய்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானில் வசித்து வரும் கார்த்தி என்பவருக்கும், கஸ்தூரி என்பவருக்கும் 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கஸ்தூரியிடம் வரதட்சணை கேட்டு கார்த்தி துன்புறுத்தியதாகவும் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கஸ்தூரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு கார்த்தி வீட்டார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்த கஸ்தூரியின் உறவினர்கள், கார்த்தி மற்றும் அவரது பெற்றோரை சரமாரி தாக்கியுள்ளனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தினர். செட்டிநாடு காவல் நிலையத்தில் கஸ்தூரியின் தாயார் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : death , Adolescent, suicidal, suspicious, complaining to the police
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...