சென்னை : 2ம் நிலை காவலர் பணிக்கு திருநங்கைகளுக்கான வயது வரம்பை 45ஆக உயர்த்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசிடம் உரிய விளக்கத்தை கேட்டு தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 2,465 2ம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்ப தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. திருநங்கைகள் சீர்மரபினர் பிரிவில் வருவதால் அவர்களுக்கான வயது வரம்பை 45ஆக உயர்த்திக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.