×

ஓசூரில் தண்டு பகுதியில் குலை தள்ளிய அதிசய வாழை

ஓசூர் :  ஓசூரில் தண்டு பகுதியில் குலை தள்ளிய வாழையை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். ஓசூர் அண்ணாமலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமக்கா. இவர் தனது வீட்டிற்கு அருகில் வாழை நட்டு பராமரித்து வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் அப்பகுதியில் பலத்த காற்று வீசியது. இதில், வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. இவ்வாறு சேதமடைந்த ஒரு மரத்தின் தண்டு பகுதியிலிருந்து குலை தள்ளியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் அந்த மரத்தை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

இதுகுறித்து ராமக்கா கூறுகையில், பலத்த காற்று மழைக்கு வாழை மரங்கள் சேதமடைந்தாலும் அதனை தொடர்ந்து பராமரித்து வந்தேன். அதற்கு பலனாக முறிந்து விழுந்து வாழையின் தண்டு பகுதியில் இருந்து குலை தள்ளியுள்ளது அதிசயமாக உள்ளது. இதனை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச்செல்கின்றனர் என்றார்.


Tags : stem area ,Hosur , Hosur ,banana ,stem area
× RELATED ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு