குஜராத்: குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வாயு புயல் நிலவரத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது என பிரதமர் மோடி ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் மாநில அரசுகளுடன் தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்து வருகிறேன் எனவும் பதிவிட்டுள்ளார். தேவையான உதவிகளை வழங்க தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.