×

போடி அருகே பரபரப்பு சம்பவம் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி 12 பேரால் பெண் பலாத்காரம்: 3 பேர் கைது

போடி: தேனி மாவட்டம், போடி அருகே சங்கராபுரம் 16வது வார்டை சேர்ந்தவர் கலா (28, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது கணவர் கேரளாவில் வேலை பார்க்கிறார். 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் அனுப்பும் பணத்தை எடுக்க இப்பகுதியிலுள்ள தனியார் வங்கிக்கு கலா அடிக்கடி சென்று வந்தார். அப்போது வங்கி மேலாளர் முத்து சிவகார்த்திகேயன்(30),  வங்கியில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி கலாவை பலாத்காரம் செய்துள்ளார். மேலும் அதை வீடியோ எடுத்து வைத்து நண்பர்களுக்கும் விருந்தாக்கினார். இதுகுறித்து தேனி எஸ்பி பாஸ்கரனிடம், கலா புகார் அளித்தார். இதையடுத்து போடி புறநகர் போலீசார் வழக்குப்பதிந்து வங்கி மேலாளர் முத்து சிவகார்த்திகேயன், அவரது நண்பர் ஈஸ்வரனை நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் 10 பேரை தேடி வந்தனர்.

நேற்று போடி அருகே சூலப்புரத்தை சேர்ந்த  பாண்டீஸ்வரன்(29), கடமலைக்குண்டை சேர்ந்த அன்பழகன்(26), போ.மேலசொக்கநாதபுரத்தை சேர்ந்த  சதீஸ்குமார்(33) ஆகியோரை கைது செய்தனர். மேலும் 7 பேரை தேடி வருகின்றனர். இந்த பலாத்கார சம்பவத்தில் வங்கியின் சீனியர் மேனேஜர் ஒருவர் சம்பந்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அவரையும் தேடிவருகின்றனர்.  உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து கலாவை நேற்று போலீசார், மருத்துவ பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவர் கூறுகையில், ‘‘கணவன் அனுப்பும் பணத்தை எடுக்க வங்கிக்கு சென்றேன். அப்போது வங்கி மேனேஜர் வங்கியிலேயே வேலை வாங்கி தருகிறேன் என சொல்லி என்னை பலாத்காரம் செய்துவிட்டார். அதை தெரியாமல் வீடியோவும் எடுத்துள்ளார். அதை காட்டி மிரட்டி அவரது நண்பர்களுக்கும் என்னை விருந்தாக்கி விட்டார். அவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும்’’ என்றார்.

Tags : gang , Bodi, female rape, arrest
× RELATED புதுச்சேரியில் கோயில் ஊர்வலத்தில் பெயிண்டர் கொலை வழக்கு: போலீஸ் வலை