×

பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 12 அடி உயர்வு

வி.கே.புரம்: தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் நெல்லை மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பாபநாசம் அணையின் நீர்மட்டம், ஒரே நாளில் 12 அடி உயர்ந்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் முக்கிய நீராதாரமான பாபநாசம் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்தது. இந்நிலையில் 10 நாட்கள் தாமதமாக தற்போது தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது. விடிய விடிய அணைப்பகுதியில் பெய்த மழையால், ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 12.20 அடி அதிகரித்துள்ளது. பாபநாசம் அணையில் 12.20 அடியாக இருந்த நீர்மட்டம் மழையால் மேலும் 12.20 அடி அதிகரித்து 24.40 அடியானது. அணைக்கு விநாடிக்கு 1153.70 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 25 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Tags : Papanasam , Papanasam dam, rise
× RELATED பாபநாசம் அருகே 4 கிராம மக்கள் தேர்தல்...