சென்னை: சிரிக்க வைத்ததை தவிர யாரையும் அழ வைக்காதவர் எனவும், முதல் முறையாக எல்லோரையும் அழ வைத்திருக்கிறார் கிரேஸி மோகன் என கவிஞர் வைரமுத்து இரங்கலை தெரிவித்தார். மேலும் நகைச்சுவை என்பது பண்படுத்தத்தானே தவிர, புண்படுத்த அல்ல என்பதை அறிந்தவர் எனவும் கூறினார். கிரேஸி மோகன் நாடக ஆசிரியர் மட்டும் அல்ல, வெண்பா எழுதத் தெரிந்த விகடகவி எனவும் தெரிவித்தார்.