புதுச்சேரி: புதுவை கவர்னர் கிரண்பேடி தனது 3 ஆண்டு பணியை கடந்த வாரத்துடன் நிறைவு செய்தார். அவர் பணியிட மாறுதலாகி வேறு மாநிலத்துக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதை கவர்னர் கிரண்பேடி மறுத்தார். முன்னதாக, மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மார்ச் 11ம்தேதி முதல் தனது ஆய்வுப் பணியை நிறுத்தியிருந்த கவர்னர் கிரண்பேடி, நேற்று மீண்டும் தனது ஆய்வை தொடங்கினார். ராஜ்நிவாஸில் இருந்து சைக்கிளில் புறப்பட்ட அவர், ஆம்பூர் சாலையில் உள்ள பெரிய வாய்க்கால், கதிர்காமத்தில் கனகன் ஏரியை ஆய்வு செய்தார்.அரைமணி நேரத்தில் ஆய்வுப் பணியை முடித்த கிரண்பேடி மீண்டும் ராஜ்நிவாஸ் திரும்பினார்.