அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த தா.பழூரில் 1500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் நடத்திய சோதனையில் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பிளாஸ்டிக் சிக்கியது. இதையடுத்து பதுக்கி வைக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, அந்த நிறுவனங்களுக்கு தலா ரூ.11,000 அபராதம் விதித்தனர்.