சேலம்: சேலத்தில் ஈரடுக்கு பாலத்தின் ஒரு பகுதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சேலம் மாநகரின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இரண்டடுக்கு மேம்பாலம் ரூ.320 கோடி மதிப்பில் கட்டப்படுகிறது. ஏவிஆர் ரவுண்டானா-அஸ்தம்பட்டி வரை 3 கி.மீ.க்கு பணிகள் முடிந்த பாலப்பகுதியை முதல்வர் திறந்து வைத்தார். சேலத்தில் நடைபெற்று வரும் பாலம் திறப்பு விழாவில், திமுக எம்.பி.க்கள், எம்எல்ஏ.க்கள் பங்கேற்றுள்ளனர்.