×

வேளச்சேரி மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் செய்த 2 பேர் கைது

வேளச்சேரி: வேளச்சேரியில், மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்து, மேலும் 2 பேரை மீட்டனர். வேளச்சேரி பேபி நகரில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக வேளச்சேரி காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது.

இதையடுத்து, போலீசார் நேற்று மாலை அந்த மசாஜ் சென்டரை கண்காணித்தனர். அப்போது அந்த சென்டரில் பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இந்த மசாஜ் சென்டரை திடீர் சோதனை நடத்தினர். அப்போது, மசாஜ் சென்டர் நடத்திய பிரவீன் (24), சந்தியா (30), ஆகியோரை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 2 பெண்களை மீட்டனர்.

Tags : persons ,sexual assault ,massage center ,Velachery , Velasheri massage, center, sex industry,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...