பனாஜி: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், உடல் நலக்குறைவால் கடந்த மார்ச் மாதம் இறந்தார். இதையடுத்து, இம்மாநில சட்டப்பேரவை சபாநாயகராக இருந்த பிரமோத் சாவந்த், புதிய முதல்வராக பொறுப்பேற்றார். இதனால், சபாநாயகர் பதவி காலியாக இருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற சபாநாயகர் தேர்தலில், பாஜ எம்எல்ஏ ராஜேஷ் பட்நாய்க் 22 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரசின் பிரதாப் சிங் ரானே 17 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இதையடுத்து, ராஜேஷ் பட்நாய்க் புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.