×

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு: ராஜேஷ் தாஸ்க்கு சிறை தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்..!!

சென்னை: பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கீழமை நீதிமன்றம் ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. சிறை தண்டனையை நிறுத்திவைக்கக் கோரியும் சரணடைவதில் இருந்து விலக்குகோரியும் ராஜேஷ் தாஸ் மனு தாக்கல் செய்திருந்தார். சரணடைவதில் இருந்து எப்படி விலக்கு கோருகிறீர்கள் என்று ராஜேஷ் தாஸுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

The post பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு: ராஜேஷ் தாஸ்க்கு சிறை தண்டனையை உறுதி செய்தது ஐகோர்ட்..!! appeared first on Dinakaran.

Tags : SC ,Rajesh Das' ,CHENNAI ,Madras High Court ,DGP ,Rajesh Das ,Dinakaran ,
× RELATED முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸின்...