×

தொடர்ந்து ஓராண்டாக பணிக்கு வராத டிரைவர், கண்டக்டர்கள் 23 பேரை நீக்க முடிவு: எம்டிசி நடவடிக்கை

சென்னை: தொடர்ந்து ஓராண்டாக பணிக்கு வராத டிரைவர், கண்டக்டர்கள் 23 பேரை பணி நீக்கம் செய்ய எம்டிசி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டுள்ள நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது:எம்டிசியை சார்ந்த பணியாளர்கள் 23 ேபர் எவ்விதமான முன்னறிவிப்புமின்றி பணிக்கு வராமல் உள்ளனர். இதுகுறித்து உரிய விளக்கமளிக்குமாறு பலமுறை எழுத்து பூர்வமாக அறிவுறுத்தப்பட்டது.

 மேலும் விசாரணை நடத்தப்பட்டதில் குற்றச்சாட்டு நிரூபணமாகியுள்ளது. எனவே அவர்களை நிரந்தரமாக நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான ஏழு நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவர்கள் தலைமை அலுவலகத்தில் விளக்கம் அளிக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, பணிக்கு வராத 50 டிரைவர், கண்டக்டர்களை நீக்குவதாக கடந்த வாரம் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.




Tags : conductors ,MDC , year, Driver, Controllers, MDC action
× RELATED வாக்களிப்பதற்கு எந்த வசதியும் செய்து...