புதுடெல்லி: மாலத்தீவில் கடந்தாண்டு நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் இப்ராகிம் முகமது சோலிக் வெற்றி பெற்றார். அவரது பதவியேற்பு விழாவில் மோடி பங்கேற்றார். கடந்த டிசம்பரில் இந்தியா வந்த சோலிக், மாலத்தீவு வரும்படி மோடிக்கு அழைப்பு விடுத்தார். அதேபோல், மோடியின் பதவியேற்பு விழாவிற்கு வந்த இலங்கை அதிபர் சிறிசேனாவும் மோடிக்கு அழைப்பு விடுத்தார். இதை ஏற்று, இந்நாடுகளுக்கு மோடி செல்கிறார். முதலில், 8ம் தேதி மாலத்தீவு செல்கிறார். 9ம் தேதி அங்கிருந்து இலங்கை செல்கிறார்.