×

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தொடர வேண்டும் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து தலைமை தாங்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை: இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது: ஜூன் 3ம் தேதி கருணாநிதியின் பிறந்தநாளில், அவரின் நினைவிடத்தில் வெற்றிக்கனியை சமர்ப்பிக்க வேண்டும், அதற்கு நாம் சபதம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் பிரசார தொடக்க விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் குறிப்பிட்டிருப்பதை போல அனைத்து தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றுள்ளோம்.

தமிழ்நாட்டில் ஜாதி வெறிக்கு, மதவெறிக்கு இடமில்லை என்று தமிழக மக்கள் நிரூபித்துள்ளார்கள். பெரியார், அண்ணா, கலைஞர் வழி வந்தவர்கள் நாம். இங்கு மத, ஜாதி ஆதிக்கத்திற்கு இடமில்லை என்பதை நிரூபித்து இருக்கிறார்கள். இந்தி திணிப்பையும் எதிர்த்து போராட வேண்டும். நம்முடைய தாய்மொழியை காப்பாற்ற வேண்டும். அதனால் தமிழகத்தின் உரிமையை, நலனை காக்க நமது அணி தொடர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : MK Stalin ,Muthuraman , Secular Progressive Alliance, to continue, MK Stalin, to lead, Muthrasan, assertion
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...