சென்னை: எழும்பூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கல் வைத்து புறநகர் ரயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளது.எழும்பூரில் இருந்து கடற்கரை செல்லும் வழியில் உள்ள தண்டவாளத்தில் மர்மநபர்கள் கல் வைத்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. புறநகர் ரயிலை இயக்கிய ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. கல் வைத்த மர்மநபர்கள் குறித்து எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.