×

பிரபல மலையாள நடிகர் போபனை கொல்ல முயன்றவருக்கு சிறை

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபனை கடப்பாறையால் குத்திக்கொல்ல முயன்ற முதியவருக்கு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. மலையாள சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் குஞ்சாக்கோ போபன். கடந்த 2018 அக்டோபர் 5ம் தேதி இவர் எர்ணாகுளம் ரயில்நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கொச்சி தோப்பம்படியை சேர்ந்த ஜோசப் (75) என்பவர் திடீரென கடப்பாறையால் குஞ்சாக்சோ போபனை குத்தி கொல்ல முயன்றார்.

இதை கவனித்த அவர் சமயோசிதமாக விலகி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இந்த சம்பவத்தில் குஞ்சாக்கோ போபன் மயிரிழையில் காயமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்து கொச்சி போலீசில் அவர் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோசப்பை கைது செய்தனர். இந்த வழக்கு எர்ணாகுளம் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜோசப்புக்கு ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டது.

Tags : actor ,Malayali ,Boban , Malayalam actor, Boban, kill, jail
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்...