பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் ரோகன் போபண்ணா ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்திய வீரர் ரோகன் போபண்ணா மற்றும் ருமேனிய வீரர் மாரிஸ் காபில் ஜோடி பிரான்சின் பெஞ்சமின் போன்ஜி மற்றும் அன்டோயன் ஹாங் ஜோடியை எதிர்கொண்டது.