×

நட்சத்திர ஓட்டலுக்கு 17.47 லட்சம் வாடகை பாக்கி தொழிலதிபர் சிறையிலடைப்பு

சென்னை: எழும்பூர் இர்வின் சாலையில் பிரபல நட்சத்திர ஓட்டல் உள்ளது. இங்கு, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தெற்கு மாட வீதியை சேர்ந்த தொழிலதிபர் சக்திவேல் (46) என்பவர், கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2018ம் ஆண்டு வரை அறை எடுத்து தங்கினார். ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்த சத்திவேல், ஓட்டலில் தங்கிய நாள் முதல் அறை வாடகை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். மொத்தம் 26.74 லட்சம் அவர் செலுத்த வேண்டி இருந்தது. அதில், முன் பணம் மற்றும் தங்கி இருந்தபோது சிறுக சிறுக ₹9 லட்சம் கொடுத்து இருந்தார்.  மீதம் 17 லட்சத்து 47 ஆயிரத்து 402 செலுத்த வேண்டும்.  

சக்திவேல் சொகுசு கார் வைத்திருந்தார். மேலும் அவரது டிப்டாப் தோற்றத்தால் ஓட்டல் நிர்வாகம் கெடுபிடியாக வாடகையை கேட்கவில்லை. அறையை காலி செய்யும் போது வசூலித்து கொள்ளலாம் என்று முடிவு செய்தனர். இதனிடையே சக்திவேல் எந்த அறிவிப்பும் இன்றி ஓட்டல் அறையை திடீரென காலி ெசய்து விட்டு தலைமறைவானார். இதுகுறித்த புகாரின் பேரில் எழும்பூர் போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவான தொழிலதிபர் சக்திவேலை நேற்று விருதுநகரில் கைது செய்தனர். பின்னர் சென்னை அழைத்து வந்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : star businessman ,star hotel , 17.47 lakhs rented, star businessman jailed,star hotel
× RELATED சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான...