×

கொடைக்கானலில் இன்று வட்டமடித்த விமானம்..: போர் விமானம் போல் காட்சியளித்ததால் பொதுமக்களிடையே பரபரப்பு

திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் இன்று காலை 9.30 மணிக்கு பறந்த விமானம் ஒன்று போர் விமானம் போல் இருந்ததால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. கொடைக்கானலில் தற்போது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா நடந்து வருகிறது. இதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து குவிந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை கொடைக்கானல் நகர் மற்றும் மேல் மலை கிராமங்களில் விமானம் பறப்பது போன்ற சத்தம் கேட்டது. உடனே காட்டேஜ், விடுதிகளில் தங்கி இருந்த சுற்றுலா பயணிகளும் வீடுகளில் இருந்த பொதுமக்களும் வெளியே ஓடி வந்து பார்த்தனர். அப்போது போர் ஒத்திகையில் ஈடுபடும் விமானங்கள் வானில் பறந்து சென்றதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சுமார் 20 நிமிடம் கொடைக்கானல் நகரிலும், மலை கிராமங்களிலும் வட்டமடித்த அந்த விமானங்கள் பின்னர் மறைந்தது.

இந்த நிலையில், கொடைக்கானலில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மூணாறில் இருக்கும் ராணுவ மையத்தின் போர் பயிற்சி விமானமாக இது இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், கொடைக்கானலில் மத்திய அரசு புதிய திட்டத்தை செயல்படுத்த ஏதேனும் முயற்சிக்கிறதா? என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், ஏற்கனவே மத்திய அரசு மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை பல்வேறு பகுதிகளில் செயல்படுத்த துடித்து வருகிறது. இந்த நிலையில், கொடைக்கானலில் போர் விமானம் பறந்துள்ளது, அங்கு மத்திய அரசு புதிய திட்டத்தை செயல்படுத்த ஏதேனும் முயற்சிக்கிறதா? என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்ட வான்பரப்பில் திடீர் திடீரென குட்டி ரக விமானங்கள் பறந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இவை எதற்காக பறக்கின்றன என்பது புரியாத புதிராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.



Tags : Kodikanam ,public ,fighter , Kodaikanal, fighter plane, rehearsal, flower exhibition
× RELATED மாவட்ட அளவிலான செயல் திட்டத்தை...