×

கல்பனா சாவ்லா விருது பெற வீர சாகச செயல் புரிந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது பெற வீர சாகச செயல் புரிந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரால், சுதந்திரதின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதில், ரூ.5 லட்சத்திற்கான காசோலையும் மற்றும் ஒரு பதக்கமும்  அடங்கும். தமிழ்நாட்டை சேர்ந்த, துணிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்த பெண் விண்ணப்பதாரர் மட்டுமே இந்த விருதினை பெற தகுதியுள்ளவர்.

2019ம் ஆண்டு வழங்கப்படவுள்ள விருதிற்கான விண்ணப்பங்கள், விரிவான விவர குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன், அரசு முதன்மைச் செயலாளர், பொதுத் துறை, தலைமை செயலகம், சென்னை - 600009 என்னும்  முகவரிக்கு வருகிற ஜூன் 30ம் தேதிக்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். விருதுபெற தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தேர்வு செய்யப்படுவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Girls , Kalpana Chawla, award, Girls , adventure
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்