ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் பாய்மரப் படகு போட்டி உற்சாகமாக நடைபெற்றது. அங்குள்ள தர்ம முனிஸ்வரர் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற இப்போட்டியில், ஏராளமான படகுகள் கலந்துகொண்டன. கடலில் அதிவேகமாக சீறிக்கொண்டு சென்ற படகுகளை, கரையிலிருந்த ஏராளமானோர் ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர். அரசு மருத்துவர்களின் பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்ட வீரர்கள், அந்த படகுகளை இயக்கினர்.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளும் வழங்கி கெளரவிக்கப்பட்ட நிலையில், ராமநாதபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து வந்த ஏராளமான பார்வையாளர்கள் இப்போட்டியை கண்டு ரசித்தனர். இப்போட்டியை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்தனர்.