சென்னை: எதிர்கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஓரணியில் திரட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் தான் தமிழகத்தில் மகத்தான வெற்றி கிடைத்தது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.இதுகுறித்து சென்னையில் நேற்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:எதிர்கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஓரணியில் களம் கண்டிருக்கும் நல்ல பணியினை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றியுள்ளார்.
அந்த மகத்தான பணியின் காரணமாக தான் தமிழகத்தில் இந்த வெற்றி கிடைத்துள்ளது. இதற்கு மு.க.ஸ்டாலினுக்கும், மதச்சாற்பட்ட முற்போக்கு கூட்டணி தலைவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். மத்திய,மாநில கட்சிகள் அதிகார பலம், பண பலம், வரம்பு மீறல்கள் என அனைத்தையும் மேற்கொண்டது. தமிழக வாக்காளர்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்ததன் மூலம் தமிழகத்தில் மதச்சார்பற்ற ஜனநாயக கோட்பாட்டை உயர்த்தி பிடிப்பதில் தமிழகம் முன்னிலையில் நிற்கிறது என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழக வாக்காளர்களுக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு கூறினார்.