டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்து வருகிறார். மக்களவைத் தேர்தலின் 7 கட்ட வாக்குப்பதிவு நிறைவடையும் நிலையில் சோனியாவை சந்திரபாபு நாயுடு சந்தித்துள்ளார். காலையில் ராகுல் காந்தி மற்றும் சரத் பவாரை சந்தித்த நிலையில் தற்போது சோனியா காந்தியுடன் சந்திரபாபு நாயுடு சந்தித்துள்ளார்.