×

அவரை பற்றி எப்படி இப்படி சொல்லலாம் : டைம் பத்திரிகைக்கு பாஜ கண்டனம்

பிரதமர் மோடியை `டைம்’ பத்திரிகை சமீபத்தில், ‘பிரித்தாளும் தலைவர்’ என சித்தரித்து கட்டுரை வெளியிட்டது. இதற்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது பற்றி இக்கட்சியின் தேசிய அறிக்கை தயாரிப்பு துணைக் குழு உறுப்பினர் கருணா கோபால் கூறியதாவது: பிரதமர் மோடியை பிரித்தாளும் தலைவர் என திரித்து கூறி பிரசுரமான கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய போராட்டம் நடத்த உள்ளோம். அவர் பிரிவினைவாதி அல்ல; ஒன்றுபடுத்துபவர், ஒருங்கிணைப்பாளர், நல்லிணக்கவாதி. அவரது ஆட்சியில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வடகிழக்கு மாநிலங்களின் விமானம், ரயில் போக்குவரத்து, தொலைத் தொடர்பு, சுற்றுலாத் துறைகள் மேம்பட்டுள்ளன.

மோடி அரசின் ஜன் தன் யோஜனா, உஜ்வாலா, முத்ரா, சுவாச் பாரத் திட்டங்களின் மூலம் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பிற்படுத்தப்பட்டோர் உள்பட அனைத்து பிரிவினரும் பயன் அடைந்துள்ளனர். இப்படிப்பட்டவரை பிரித்தாளுபவர் என்று எப்படி கூறலாம்?. அவரது அணுகுமுறையினால் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அவரை முழுமனதாக ஏற்றுக் கொண்டுள்ளன. சர்வதேச அளவில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் அவரை ஏற்றுள்ளனர். ஒன்றிரண்டு பத்திரிகையாளர்கள் மட்டுமே அவரைப் பற்றி இதுபோன்று எழுதுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Bhajan , Bjp denounced ,Time magazine
× RELATED திமுக அளித்த புகாரில் ஒன்றிய...