மதுரை : நீதிமன்றம் தெரிவித்துள்ளதால் கமல் பேச்சு குறித்து பேச விரும்பவில்லை என்று மதுரையில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி பேசினால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்த அவர், அண்ணா பல்கலை.யில் அரசியல் தலையீடு இருப்பதாக துணைவேந்தர் சுரப்பா கூறியது தவறானது என்றும் தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் கூறினார்.