திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே கண்டவராயன்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் (எ) பையா கார்த்திக் (28). அமமுக பிரமுகர். இவர் கடந்த வாரம் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடினார். அப்போது பட்டாக்கத்தியில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
அவரது பிறந்தநாள் வீடியோ வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்ததால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
இதையடுத்து சிவகங்கை மாவட்ட எஸ்.பி ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில், கண்டவராயன்பட்டி போலீசார் கார்த்திக் உள்பட அவரது நண்பர்கள் 5 பேரை நேற்று கைது செய்தனர்.கார்த்திக் மீது ஏற்கனவே திருக்கோஷ்டியூர், கண்டவராயன்பட்டி, திருப்புத்தூர் காவல் நிலையங்களில் மணல் கடத்தல் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளது.