×

பிரபல ஓட்டலில் வழங்கப்பட்ட சாம்பாரில் செத்து கிடந்த பல்லி

நாக்பூர்: நாக்பூரில் உள்ள பிரபலமான ஓட்டலில் வழங்கப்பட்ட சாம்பாரில் பல்லி ஒன்று செத்துக் கிடந்தது.ஹல்திராம் என்ற நிறுவனம் நொறுக்குத்தீனி தயாரிப்பில் பிரசித்திப் பெற்றது. இப்போது இந்த நிறுவனம் முக்கிய நகரங்களில் ஹல்திராம் ரெஸ்டாரண்ட் என்ற பெயரில் ஓட்டல்களையும் நடத்தி வருகிறது.மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டம், வார்தாவில் உள்ள ஹல்திராம் ரெஸ்டாரண்டுக்கு யஷ் அக்னிகோத்ரி என்பவர் தனது குடும்பத்துடன் நேற்று காலை சிற்றுண்டி சாப்பிடுவதற்காக சென்றார். அவர் மெதுவடை மற்றும் சாம்பார் ஆர்டர்  செய்தார். அதன்படியே ஒட்டல் சிப்பந்தி சாம்பார் ஊற்றிய மெதுவடையை யத் அக்னிகோத்ரிக்கு கொண்டு வந்து கொடுத்தார்.

யஷ் அக்னிகோத்ரி மெதுவடையை சாப்பிடத் தொடங்கியபோது சாம்பாரில் பல்லி ஒன்று செத்துக் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதற்குள் அந்த மெதுவடை சாம்பாரை குடும்பத்தினர் இரண்டு பேர் சாப்பிட்டிருந்தனர். சாம்பாரில் பல்லி  செத்து கிடப்பதை அறிந்த அவர்கள் இருவருக்கும் வாந்தி ஏற்பட்டது. தலையும் சுற்றியது.உடனடியாக அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகளிடம் யஷ் அக்னிகோத்ரி நேற்று புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து  அதிகாரிகள் ஹல்திராம் ரெஸ்டாரண்டில் சோதனை நடத்தினர். அந்த ரெஸ்டாரண்டுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : cafe , Presented, famous , The lizard ,sambar
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் கபே...