ஈரோடு: ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கன மழை பெய்து வருகிறது. ஈரோட்டில் அரைமணி நேரமாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். அதேபோல் நெல்லை மற்றும் நாமக்கல் சுற்று வட்டார இடங்களிலும் காற்றுடன் மழை பெய்து வருகிறது.