×

திருச்சியில் தனது அன்னைக்காக கோவில் கட்டிய தொழிலதிபர்

திருச்சி: உலக அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், திருச்சியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது அன்னைக்கு கோவில் கட்டியுள்ளார். திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரான சுரேஷ்குமார், இவர் துறையூரில் தனது அன்னை தனபாக்கியம் நினைவில் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் கோவில் கட்டியுள்ளார். இந்த கோவில் பிரமாண்ட அமைப்புடன் காணப்படுகிறது. இந்த கோவில் பழமையான கட்டமைப்புடன் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு தனபாக்கியம் அம்மாள் திருக்கோவில் மண்டபம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.  

இந்த கோவிலின் முகப்பில் பிரம்மாண்ட நுழைவு வாயிலுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலில் நினைவுத்தூண், பூங்கா, தியான மண்டபம், மணி மண்டபம் என கோவிலுக்கான அத்தனை அம்சங்களும் அமையப்பெற்றுள்ளன. இந்த கோவில் மேன்மையான பல சிறப்பு அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும் தன்னுடைய தாய் தனபாக்கியத்தின் உருவத்தை 4 அடி உயர வெண்கல சிலையாகவும் நிறுவியுள்ளார்.
அங்குள்ள மணிமண்டபத்தில் சுரேஷ்குமாரின் அன்னையின் உருவப்படம் 64 வித ஒவியங்களாக வரையப்பட்டு, காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. அன்னைக்காக எழுப்பட்ட இந்த கோவிலை சுற்றுலா பயணிகள் அனைவரும்  வியப்புடன் பார்த்து வருகின்றனர்.

Tags : businessman ,Trichy , Trichy, Mother, temple, businessman
× RELATED ரூ.111 கோடி போதை பொருள் பதுக்கிய தொழிலதிபர் கைது