×

திருநங்கையாக மாற பெற்றோர் எதிர்ப்பு பட்டதாரி வாலிபர் தற்கொலை

திருவொற்றியூர்: விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் பார்த்தசாரதி (21). பட்டதாரியான இவர், கடந்த சில மாதங்களாக பெண்களுக்கு உண்டான நடை, உடை பாவனையில் இருந்துள்ளார். இதை பார்த்து  அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை கண்டித்துள்ளனர். இதனால், கடந்த 3 நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி, மணலி பெரியதோப்பில் உள்ள திருநங்கைகளுடன் தங்கியுள்ளார்.

இந்நிலையில், மாயமான மகன் பார்த்தசாரதியை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர். பின்னர், பார்த்தசாரதியின் நண்பர்களிடம் அவரைப் பற்றி விசாரித்தனர். இதுகுறித்து தெரிந்துகொண்ட பார்த்தசாரதி, பெற்றோர் தன்னை   அழைத்து சென்று, தனது விருப்பத்துக்கு மாறாக நடந்து கொள்வார்களோ என பயந்து நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்து மணலி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பார்த்தசாரதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Tags : Transgender, Parental, Resistance Graduate ,youth, suicide
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...