×

என் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை வேண்டும் : ஜாகுவார் தங்கம் புகார்

சென்னை: சங்கத்திற்கும் என் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ஜாகுவார் தங்கம் புகார் அளித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜாகுவார் தங்கம் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: ஓய்வு பெற்ற நீதிபதி பாட்ஷா தலைமையில் தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் நான் தலைவராக தேர்ந்ெதடுக்கப்பட்டேன். இதற்கிடையே கடந்த 13.6.2018ம் ஆண்டு சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. எதிரணியினர் என்னை நீக்க வேண்டும் என்று கூட்டம் நடத்தினர். சங்கத்திற்கு எதிராக கூட்டம் நடத்திய துரைசாமி, ஜம்பு மற்றும் நந்தகோபால் செட்டி ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நான் கடிதம் அனுப்பினேன். அதற்கு முறையாக பதில் இல்லை. இந்நிலையில் சங்கத்திற்கும் என் புகழுக்கும் தொடர்ந்து களங்கம் ஏற்படுத்தி வரும் நபர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சங்க அலுவலகத்திற்கு வந்து செல்லும் தயாரிப்பாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : My reputation,act on people ,stigmatized
× RELATED புறநகர் ரயில், மாநகர பேருந்து, மெட்ரோ...