×

மதுரையில் இரு சக்கர வாகனங்கள் மீது ஆம்னி பேருந்து மோதியதில் பெண் போலீசார் உட்பட 4 பேர் பலி

மதுரை: மதுரையில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது ஆம்னி பேருந்து மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மதுரை டி.பி.கே. பாலம் அருகே இரு சக்கர வாகனங்கள் மீது சென்னையை நோக்கி சென்ற தனியார் பேருந்து மோதிய விபத்தில் பெண் போலீசார் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். திருமங்கலத்தில் இருந்து சென்னைக்கு தனியார் பேருந்து ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. மதுரை நகருக்குள் இந்த பேருந்து வந்து கொண்டிருந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை நடுவில் உள்ள தடுப்பை மீறி நிலைதடுமாறி சென்றுள்ளது. வேகமாக சென்ற பேருந்து எதிரே வந்து கொண்டிருந்த இரண்டு பைக்குள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 2 பெண்கள் மற்றும் சிறுமி உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் படுகாயமடைந்த நபர் ஒருவர் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் விபத்து தொடர்பாக ஆம்னி பேருந்து ஓட்டுநரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் பலியான நான்கு பேரில், தல்லாகுளம் போக்குவரத்துப்பிரிவு போலீஸ் ஜோதி அவரது உறவினர் சத்தியவாணி மற்றும் அவரது மகள் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் மதுரையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Tags : women ,policeman ,Omni ,Madurai , Two Wheelers, Omni Bus, Accident, Killing
× RELATED தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தை கடத்தல்: 24 மணி நேரத்தில் 2 பெண்கள் கைது