சென்னை: சென்னையில் இருந்து மலேசியாவுக்கு காலை 11.45 மணிக்கு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது மலேசியா செல்ல வந்த சென்னையை சேர்ந்த திலகம் கலைமணி (30) என்ற பெண் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து சோதனை செய்தபோது உள்ளாடையில் புத்தம் புது ₹2000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. மேலும் அவரது உடமைகளை சோதனை செய்தபோது அவரிடம் ₹31 லட்சம் மதிப்புள்ள ஹவாலா பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து அவரது பயணத்தை ரத்து செய்து விசாரிக்கின்றனர்.