கோவில்பட்டி, மே 8: மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன் ேநற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வரும் 19ம் தேதி ஓட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே நடந்து முடிந்த 18 தொகுதி இடைத்தேர்தலில் தங்களுக்கு பாதகமான முடிவு இருக்கும் என்பதால் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக 3 அதிமுக எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்ய பேரவை தலைவர் மேற்கொண்ட முயற்சிக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதை வரவேற்கிறோம்.
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி ஆட்சியின்மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர். இதனால் தார்மீக பொறுப்பேற்று தாங்களாவே பதவி விலக வேண்டும். ஆனால் ஏதாவது ஒரு வகையில் பதவியை தக்க வைத்து கொள்வதற்கு ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தமிழக மக்களின் எதிர்ப்பானது அதிக அளவில் தேர்தலில் பிரதிபலித்துள்ளது. பாஜ, அதிமுகவுக்கு எதிரான தீர்ப்பாக மக்களவை மற்றும் 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவு அமையும். இதனால் மத்தியிலும், தமிழகத்திலும் ஆட்சி மாற்றும் ஏற்படுவது உறுதி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி