×

மதுரை மேலூர் அருகே வாகனச் சோதனையில் 3 கிலோ தங்கம் பறிமுதல்: சென்னையைச் சேர்ந்த 4 பேரிடம் விசாரணை

மதுரை: சென்னையில் இருந்து மதுரை வந்த காரில் 3 கிலோ தங்கத்தை, தேர்தல் பறக்கும் படையினர் நேற்று காலை மேலூர் அருகே பறிமுதல் செய்தனர்.தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிந்தும், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடக்க இருப்பதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. தேர்தல் பறக்கும் படையினர் தொடர்ந்து தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அதிகாலை சென்னையில் இருந்து மதுரைக்கு வந்த காரை, மேலூர் அருகே சிட்டம்பட்டி சோதனைச்சாவடியில் பறக்கும் படை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 3 கிலோ தங்கம் இருந்தது தெரியவந்தது.

காருக்குள் சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த சோட்டு சிங் (31), பிரவீன்சிங் (21), கன்பத்சிங் (23) ஆகியோர் இருந்தனர் காரை கஜேந்தர் சிங் (38) ஓட்டி வந்தார். தங்கம் குறித்து காரில் வந்த நால்வரிடமும்  அதிகாரிகள் விசாரித்தனர். சென்னையில் இருந்து மதுரையில் உள்ள நகைக்கடைகளுக்கு, இந்த தங்கத்தை எடுத்து செல்வதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் அதற்குரிய சரியான ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்து மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து மதுரை தெற்கு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : vehicle test ,Mellore , Madurai, vehicle testing, 3 kg gold, confiscation,
× RELATED மேலூரில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை