×

வேட்பு மனு தள்ளுபடி கண்ணகி வேடத்தில் திருநங்கை போராட்டம்

மதுரை: திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட திருநங்கை பாரதி கண்ணம்மா வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தார். அதை பரிசீலித்த தேர்தல் அதிகாரி பஞ்சவர்ணம் மனுவை தள்ளுபடி செய்தார். இதனால் தனக்கு நீதி வேண்டும் என்று கேட்டு, நேற்று மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் கண்ணகி வேடம் அணிந்து கையில் கால் சிலம்பை தூக்கியபடி அவர் கோஷமிட்டார். அவர் நிருபர்களிடம் கூறும்போது, “ தேர்தல் அதிகாரியிடம் உரிய விளக்கங்கள் பெற்றுதான் மனு தாக்கல் செய்தேன். ஆனால் எனது மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு நீதி கேட்டு கலெக்டரிடம் மனு அளிக்கவும், எனது உணர்வை வெளிப்படுத்தவும் கண்ணகி வேடமணிந்தேன். இங்கு நீதி கிடைக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவேன்” என்றார். அவரது மனுவில் 2 பேர் மட்டுமே கையெழுத்திட்டு இருந்ததால் தள்ளுபடியானதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nomination, disclosure, kannikadam, transgender, struggle
× RELATED எனது அரசியல் வாழ்க்கையில் பாஜகவை...