×

பாஜகவுல சேரப்போறீங்களா? நிருபரின் கேள்வியால் டென்ஷனான ஓபிஎஸ்: திருமங்கலத்தில் பரபரப்பு

திருமங்கலம்:  மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று பேட்டியளித்தார். அப்போது ‘பாஜவிற்கு நீங்கள் போகப்போவதாக கூறப்படுகிறதே?’ என்று நிருபர்கள் கேட்டனர். இந்தக்  கேள்வியால் டென்சனான ஓ.பன்னீர்செல்வம், ‘அது முட்டாள்தனமான கேள்வி’ என்று கோபத்துடன் பதிலளித்தார். பேட்டி நடந்து கொண்டிருந்தபோது தனியார் டிவி நிருபர், ‘பாஜகவுல நீங்கள் சேரப்போவதாக எதிர்க்கட்சிகள்  குற்றச்சாட்டு கூறுகிறதே’ என்று மீண்டும் கேட்டார். அதற்கு, ‘‘ஏற்கனவே பதில் சொல்லிவிட்டேன். திரும்பக் கேட்கிறீர்களே? யார் தூண்டி விட்டு கேட்கிறீர்கள்?’’ என்று ஓபிஎஸ் மீண்டும் டென்சனுக்கு ஆளானார்.உடனே அருகிலிருந்த  துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்ட அதிமுகவினர், அந்த நிருபரைப் பார்த்து, ‘‘எப்படிங்க இப்படி கேப்பீங்க... கட்சியின் ஒருங்கிணைப்பாளர். தலைமையே அவர்தான்... அவர் வேறு  இடத்திற்கு மாறுவாரா? எப்படி கேக்கலாம்? எந்த கேள்வியும் கேளுங்க... இந்த கேள்விய கேட்கலாமா? சிண்டு முடிக்கிறீங்க... கீழ்தரமான கேள்வி கேட்டு தரத்தைக் குறைச்சுக்காதீங்க..’’ என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

‘‘மதுரையில் மட்டும்தான் நிருபர்களிடம் இந்தமாதிரி கேக்குற பிரச்னை இருக்கு. வேறெங்கும் இல்லை’’ என்றார் ஓபிஎஸ். இந்த விவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து ஓபிஎஸ் கூறுகையில், ‘‘ நான் பாஜவில் சேரப்போகிறேன் என்பது அடிமுட்டாள்தனமான கருத்து. ஒரு இயக்கத்தில் வெற்றி பெற்று வேறு இயக்கத்தில் பதவி பெற்றால் அந்த பதவியில் அவர் நீடிக்க முடியாது.அந்த 3 எம்எல்ஏக்களும் அமமுகவில் இருப்பதற்கான உறுதியான ஆவணங்கள் சபாநாயகரிடம் உள்ளது. அந்த மூவருக்கும் துணிச்சல் இருந்தால், நாங்கள் அமமுகவில் இருக்கிறோம். நடவடிக்கை எடுத்து கொள்ளுங்கள் என  கூறினால் அது அவர்களின் வீரத்திற்கு அழகு. பணப்பட்டுவாடா குறித்து யூகங்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கமுடியாது’’ என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BJP ,reporter ,Thirumangalam ,Obsession of Tension: Thrilling , join ,BJP?, Tension,Thirumangalam
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...