×

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்க உள்ள 4 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்: லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் கருத்துக் கணிப்பு

மதுரை: திருப்பரங்குன்றம் உட்பட 4 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் திமுகவே வெற்றி பெறும் என லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டது. பண்பாடு மக்கள் தொடர்பகம் அமைப்பின் (லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள்) ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளில் இடைத்தேர்தல் குறித்து ஏப். 14 முதல் 26 வரை, ஒரு தொகுதிக்கு 200 பேர் வீதம் மொத்தம் 846 பேரை சந்தித்து யாருக்கு ஓட்டு போடுவீர்கள் என கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் பெரும்பாலானோர் திமுகவுக்கே வாக்களிப்பதாக கூறினர். மேலும் மத்திய, மாநில அரசை மாற்ற வேண்டும் என 70 சதவீத மக்கள் கூறினர். எனவே 4 தொகுதியில் திமுகவே வெற்றி பெறும். இவ்வாறு தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK ,Tamil Nadu ,college alumni ,Loyola , Tamil Nadu, bypoll, 4 constituency, DMK, success, loyola college, students, computing
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...