×

பட்டா கத்தியுடன் ரகளை : 7 ரவுடிகள் பிடிபட்டனர்

அண்ணாநகர்: அரும்பாக்கம், ராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன், நள்ளிரவில் வாலிபர்கள் சிலர் மது போதையில், கையில் பட்டாக்கத்தியை வைத்துக் கொண்டு சாலையில் நடந்து சென்றவர்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை மிரட்டி தகராறு செய்தனர்.
இதனால், பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். தகவலறிந்து அரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீசார் வருவதை பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

இதையடுத்து போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த  அபோரோஸ் (33),  விஜய் (23) தீபக் (24)  கார்த்திக் என்கிற காங்கு (20)  ஜெய்பால் (25) விஜய் (21) குணசேகரன் (20) என்பது தெரியவந்தது. போலீசார் 7 பேரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Patta ,rounds , Patta knife, rogues, arrests, alcoholism disputes
× RELATED அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக்கில் சென்ற கல்லூரி ஊழியர் பலி