×

பொள்ளாச்சி போல் கூட்டு பலாத்கார சம்பவம்; ஆடியோ ஆதாரம் வெளியிட்ட வக்கீலின் உயிருக்கு ஆபத்து; பெரம்பலூர் போலீசில் புகார்

பெரம்பலூர்: பெரம்பலூரில் இன்டர்வியூ என்ற பெயரில் பெண்களை லாட்ஜூக்கு வரவழைத்த கும்பல் அவர்களை பலாத்காரம் செய்ததோடு அதிமுக எம்எல்ஏவின் ஆசைக்கும் இணங்கும்படி வற்புறுத்தி உள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் பேசும் ஆடியோ வெளியிட்ட வழக்கறிஞர் அருள் நேற்று காவல் நிலையத்தில்  அளித்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூரில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆளுங்கட்சிப் பிரமுகர் குறித்து பாதிக்கப்பட்ட பெண் என்னிடம் பேசிய ஆடியோவை 25ம் தேதி வெளியிட்டேன்.

ஆடியோவை நீதிமன்றம் முன் வெளியிடுவதாக கூறிய அன்றே  சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் அடியாட்கள், அடையாளம் தெரிந்த, பெயர் தெரியாத  10க்கும் மேற்பட்டோர் நான் பணிக்காக நீதிமன்றம் சென்றபோது பின் தொடர்ந்து  வந்தனர்.  அவர்களின் ஒரு அதிமுக பிரமுகர், எங்க ஆளு மேலேயே  புகார் கொடுக்கிறாயா, உன் சங்கை அறுத்துப் போட்டு விடுவோம், முகிலன் போல் காணாமல் போய் விடுவாய் எனச் சொல்லிக்கொண்டே  என்னை கடந்து போனார். எனவே, ஆடியோ வெளியிட்ட நிலையில் தொடர்ந்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து வழக்கு பதிந்து கொலை மிரட்டலுக்கு காரணமானவர்கள் மீதும், தூண்டுபவர் மீதும், என்னைப் பின் தொடர்பவர்கள் மீதும் வழக்கு பதிந்து  நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் தெரிவித்துள்ளார். அதிமுக வக்கீல்கள் எதிர் மனு: இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர்கள் அணியைச் சேர்ந்த கருணாநிதி, பால்ராஜ் உள்ளிட்டோர் பெரம்பலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில், `பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் அருள் என்பவர். அதிமுக குறித்து சமூக வலைத் தளங்களிலும், தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வாய்ஸ் மெசேஜ் பரப்புவதை தடுத்து நிறுத்துமாறும், மேற்கண்ட நபரின் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : incident ,Pollachi ,gang rape ,lawyer ,Perambalur , Perambalur, rape, audio proof, lawyer Arul
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!