×

ரெட்டிப்பாளையம் கிராமத்தில் காளைவிடும் திருவிழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்

கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அடுத்த ரெட்டிப்பாளையம் கிராமத்தில் நடந்த காளைவிடும் திருவிழாவில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது. கண்ணமங்கலம் அடுத்த ரெட்டிப்பாளையம் கிராமத்தில் நேற்று காளைவிடும் திருவிழா நடந்தது. விழாவையொட்டி காலை 7 மணிக்கு கிராம தேவதை திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தது. பின்னர், மேளதாள வாத்தியங்களுடன் வாணவேடிக்கை முழங்க இளைஞர்கள் பரிசு பொருட்களை எடுத்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக வாடிவாசலை வந்தடைந்தனர்.

இதனை தொடர்ந்து 9 மணிக்கு காளைவிடும் திருவிழா தொடங்கியது. இதில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில் குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் சீறிப்பாய்ந்து ஓடி கடந்து வெற்றிபெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக 70 ஆயிரம் உள்ளிட்ட 42 பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : festivities festivals ,village , Rettippalaiyam, festival, Bulls
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...