சென்னை : 4 தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுகவுக்கு பரிசு பெட்டகம் சின்னத்தை ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு டி.டி.வி.தினகரன் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் சசிகலாவுக்காக அமமுகவில் தலைவர் பதவி காலியாக வைக்கப்பட்டுள்ளது என டி.டி.வி.தினகரன் பேட்டி அளித்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் இன்று சென்னை அசோக்நகரில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலாசனை கூட்டத்தில் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கழகத்தை கட்சியாக பதிவு செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இந்நிலையில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுகவை சேர்ந்த வேட்பாளர்கள் சுயேச்சையாக போட்டியிட்டனர். இதனால் வரும் 22-ம் தேதி நடைபெறும் 4 தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுகவுக்கு பரிசு பெட்டகம் சின்னத்தை ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு டி.டி.வி.தினகரன் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் சூலூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் என்று கூறினார். எதிர்காலத்தில் அதிமுகவை அமமுகவுடன் சேர்த்து விடுவோம்; ஆதினம் சொல்வதை எல்லாம் பெரிதுபடுத்த தேவையில்லை என்று தெரிவித்தார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி