பெங்களூரு: கர்நாடகாவில் மக்களவை தேர்தல் இரு கட்டமாக நடக்கிறது. அதில் முதல் கட்டமாக 14 தொகுதிகளுக்கு நாளை வாக்கு பதிவு நடக்கிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இறுதிக்கட்ட பிரசாரத்தில் கட்சி தலைவர்கள் ஈடுபட்டனர். துமகூருவில் பேசிய பாஜ தேசிய தலைவர் அமித்ஷா, ‘‘மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மாநிலத்தில் எந்த வளர்ச்சியும் நடக்கவில்லை’’ னெ்று குற்றஞ்சாட்டினார்.
சாம்ராஜ்நகர் தொகுதியில் பிரசாரம் செய்த சித்தராமையா, ‘‘பாஜ தலைவர்களை காட்டிலும் கடவுள் மீது அமைதியான முறையில் அன்பு செலுத்தும் நாங்கள் தான் உண்மையான இந்துக்கள். மதத்தின் பெயரில் அரசியல் செய்வதுடன், சாதி, மதங்கள் இடையில் வகுப்பு கலவரத்தை தூண்டி விஷவிதை விதைத்து வரும் பாஜ தலைவர்கள் தீவிரவாதிகள் என்பதில் மாற்று கருத்தில்லை. அதேபோல் இந்துத்துவா கொள்கையை பறைசாற்றி மக்களிடம் வகுப்பு பேதம் ஏற்படுத்தி வரும் ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்கதளம் உள்பட இந்து அமைப்புகள் தடை செய்யப்பட வேண்டியவை’’ என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி