×

ஜூன் 3ல் நமக்கு புது வாழ்வு...பிரசாரத்தில் டி.ஆர்.பாலு உறுதி

சென்னை: ஸ்ரீ பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு நேற்று காலை மதுரவாயல் தொகுதி, அய்யப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பின்னர்  வீதி, வீதியாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.உடன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி நாசர், முன்னாள் எம்எல்ஏ பீமாராவ், வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர் துரை வீரமணி, அம்பத்தூர் பகுதி செயலாளர் ஜோசப் சாமுவேல், மதுரவாயல் பகுதி செயலாளர்  ராஜன், கணபதி, மாவட்ட பொருளாளர் கென்னடி மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் சென்றனர்.பிரசாரத்தின்போது, டி.ஆர்.பாலு பேசியதாவது: இந்த நாட்டில் இரண்டு ஆட்சிகள் மாற்றியமைப்பட வேண்டியுள்ளது. ஒன்று மத்தியில் மோடியின் சர்வாதிகார ஆட்சி. மாநிலத்தில் நடைபெறும் எடப்பாடியின் வஞ்சக ஆட்சி. இது பொதுமக்கள் அனைவருக்கும் தெரியும். எந்த  பயனும் இல்லாமல், மக்களுக்கு ஆக்கப்பூர்வமாக எதுவும் செய்யாமல், இன்றைக்கு மக்கள் நிம்மதியாக வாழமுடியாமல் ஒரு மோசமான ஆட்சியை சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

எனவே இந்த இரண்டு ஆட்சிகளையும் மாற்றி அமைப்பதற்கு தேர்தல் வருகிறது. இதில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஓட்டு போட்டால் மத்தியில் உள்ள மோடியின் ஆட்சி அகற்றப்படும். தமிழகத்தில் நடைபெறும் 22  சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் பொதுமக்கள் திமுகவிற்கு வாக்களித்தால் தமிழகத்தில் தலைவர் ஸ்டாலின் முதல்வராக வந்துவிடுவார். நமக்கு கவலை இல்லாத ஒரு வாழ்க்கை கிடைக்கும். வருகின்ற ஜூன் 3ம் தேதி தலைவர் கலைஞரின் பிறந்தநாள் முதல் நமக்கு புதிய வாழ்வு ஒன்று அமைய இருக்கிறது. அந்த வாழ்வு, இரண்டு ஆட்சிகளும் மாற்றி  அமைக்கப்பட்டு தலைவர் ஸ்டாலின் தலைமையில் இருக்கின்ற மாநில அரசு, ராகுல் காந்தி தலைமையில் இருக்கின்ற மத்திய அரசு. இரண்டிலுமே நாங்கள் உங்களுக்காக நல்ல வழியில் பணியாற்ற இருக்கின்றோம்.எனவே வருகிற 18ம் தேதி உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து எங்களை வெற்றி பெற செய்யவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : campaign ,TRB , June 3rd , new life, TRB confirmed, campaign
× RELATED இலவச ரேஷன் பொருட்களை உங்க சொந்த காசுல...